சனி, 31 டிசம்பர், 2016

"பள்ளி" களிடம் பனிந்த பூணுல் பத்திரிக்கை "தி இந்து "

விஸ்வரூபம் எடுத்த பாமக இணையதளப் பிரிவு!
பணிந்தது தி இந்து நாளிதழ்!!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசு MP அவர்களை குறித்துத் தவறான செய்தியை வெளியிட்டது தி இந்து இணையத்தளப் பக்கம். இதனைச் சமூகவலைத்தளங்களின் வாயிலாகப் பாமக ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் பயந்து தி இந்து ஆசிரியர் மன்னிப்பு செய்தி வெளியிட்டார். அவர் வேண்டுமென்று சாதியை இழுத்துவிட்டது தெளிவாக தெரிகிறது.

திமுக லியோனி, நடிகை விந்தியா, தி இந்து, குமுதம் ரிப்போர்டர், அதிமுக சரஸ்வதி, திமுக ஸ்டாலின், சவுக்கு, வன்னியரசு என்று நாகரிகமற்று கருத்து தெரிவித்த அனைவருமே சமூகவலைத்தளங்களில் கிழிக்கப் பட்டார்கள்.

"நாங்கள் மாங்கனியாக இனிப்பதும்
அக்னியாகச் சுடுவதும் மற்றவர்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது" என்று பாமக ஆதரவாளர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.!!

தி இந்து கும்பலின் சாதிவெறி: மருத்துவர் அன்புமணிக்கு சாதிப்பட்டம்!


'தி இந்து' வெளிவராத புத்தகங்கள்- 2016 என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைவர்களை விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் இதர தலைவர்களை பொதுவாக விமர்சனம் செய்துள்ள அப்பத்திரிகை, பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை மட்டும் சாதி பொருள் படும்படி "பள்ளி" என்று விமர்சனம் செய்துள்ளது.  

ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் மட்டம் தட்டி, தி இந்து தனது சாதி வெறி அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகத்தில் இருக்கும்  பிராமண சாதியினர் தொடர்ந்து தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர்களை குறிவைத்து தாக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும்.

பள்ளி என்பது வழக்கொழிந்துபோன சொல்.

பார்ப்பான் என்கிற பெயரை பிராமணர் பயன்படுத்த விரும்புவதில்லை. அதுபோல இன்னும் பல சமூகங்கள் அவரவர் சாதியின் 'கொச்சையானது என்று கருதப்படும் பெயர்சொற்களை' பயன்படுத்துவது இல்லை (அந்த நீண்ட பட்டியலை இங்கே குறிப்பிடும் தேவையும் இல்லை).

அதுபோல, ஒருகாலத்தில் பள்ளி என்கிற வார்த்தை மன்னர் பரம்பரை என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் - விஜயநகர பேரரசின் ஊடுருவலுக்கு பின்பு, வன்னியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், பள்ளி என்கிற வார்த்தை சாதாரண வழக்கத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை.

இதன் உச்சமாக, 1850 ஆண்டு வாக்கில், சாதிவாரி கணக்கெடுப்பில் பள்ளி என்கிற பெயரை கீழான சாதி என்கிற வரையறையின் கீழ் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயன்றனர். இதனை எதிர்த்து, 1888 ஆம் ஆண்டு வன்னியகுல சத்திரிய மகா சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் முதன்மை நோக்கம், பள்ளி என்கிற பெயரை சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தில் வெற்றியும் அடைந்தனர்.

பள்ளி என்று அழைப்பதை இன்றைக்கும் திட்டும் வார்த்தையாகவே வன்னியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதனால், பெரும் சண்டைகளும், கொலைகளும் கூட நடந்துள்ளன.

இலக்கியங்களில் பள்ளி எனும் சொல்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1950 ஆம் ஆண்டில் எழுதிய 'சௌந்தர கோகிலம்' எனும் நாவலில் - பள்ளி என்பதும் பாப்பான் என்பதும் கொச்சையான சொல் - என்று பொருள்படும் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:

'ஒகோ! அப்படியா சங்கதி "கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் பள்ளிப்பயல்" என்றும், "கண்டால் சாமி சாமி, கானாவிட்டால் பாப்பான்" என்றும் சிலர் நடந்து கொள்வதுண்டு. அதுபோல இருக்கிறது காரியம். சொந்தக்காரர் இல்லா விட்டால், அவர்களுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுகிறது. அவர்கள் இருந்தால் அவர்களிடம் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்ளுகிறது. இந்த மாதிரி நியாயம் மூட ஜனங்களிடத்தில் இருக்கத் தகுந்ததென்றல்லவா நான் நினைத்தேன். நாகரீகம் கண்ணியம் முதலியவை வாய்ந்த நம்மைப் போன்றவர்களிடத்தில்கூட இந்த நியாயம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது'. 

- இவ்வாறு 'சௌந்தர கோகிலம்' நாவல் கூறுகிறது.

வன்னிய புராணம் வசன வடிவிலான காவியத்திலும் பள்ளி என்கிற சொல் கொச்சையான சொல்லாக கீழ்கண்டவாறு அடையாள படுத்தப்பட்டுள்ளது:

தேவேந்திரன் அங்குவந்து "பள்ளியாரே! பரமசிவன் வரத்தால் பிறந்த உங்களுக்கு இந்த அல்லல் வந்தது என்ன" என்று விளையாட்டாகக் கேட்டான்.

உடனே வன்னிய குமாரர்கள் கோபமுற்று, "எங்களைப் பள்ளி என்று சொல்லி நீர் பழிக்கலாகுமோ? உம் தேகத்தை இப்போதே வெட்டி வீழ்த்தி எமதூதர் கையிலே கொடுக்கிறோம் பாரும்!" என்று கூறி கண்களாலே நெருப்புப் பொறி பறக்க வீரமீசைகள் படபடக்க ஆத்திரத்துடன் வீரவாள்களை உருவினார்கள். 

- இவ்வாறு வன்னிய புராணம்' கூறுகிறது.

பார்ப்பன இந்துவை ஒழிக்க வேண்டும்.

சுமார் கடந்த இருநூறு ஆண்டுகளாக வன்னியர்களை பழிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும் 'பள்ளி' என்கிற சொல்லைக்கொண்டு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை கேலி செய்துள்ளது தி இந்து.

பள்ளி என்பது ஒரு அரசபரம்பரை சொல்தான். ஆனால், அந்த சொல் அதே பொருளில் இப்போது பயன்பாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, சாதியை சொல்லி மருத்துவர் அன்புமணி அவர்களை திட்டவேண்டும் என்கிற இழிநோக்கில்தான் தி இந்து இதனை எழுதியுள்ளது. எனவே, இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பார்ப்பானை ஒழிக்க வேண்டும் என்கிற கொள்கையை வன்னியர்கள் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நினைவூட்டல் ஆகும்.

Thanks to.,

Mr.Arul Rathnam

Tamil social Media.

வியாழன், 29 டிசம்பர், 2016

விவசாயி -- பால்வாத்துண்ணான்

இந்த வருடம்
இல்லாமல் போய்விட்டது.!
2016-2017
வறட்சி..!

அதிமுக வில் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன்.::-

என் பண்ணுருட்டி சிங்கமே.!!
எம்.ஜி.இராமச்சந்திரனின் தோழரே.!!
எஸ்.இராமச்சந்திரன் என்ற பெயர்
கொண்டவரே.! ! !
இனியும் நாம் அங்கே இருக்கலாமா.???
எவ்வளவு பவ்யமான முகம் தங்களுக்கு.!!
இந்த முகத்தை பார்த்தாவது ......
கொடுத்திருக்கலாம்.

பாட்டாளிகளுக்கான கட்சி::--


நான் சுமார் எட்டு வயது முதல் #மருத்துவர்_அய்யாஅவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் நலனுக்காக பல்வேறு இயக்கங்களை உருவாக்கிய தலைவர், தமிழினத்திற்காக இன்று வரையிலும் போராடிய ஒரு #போராளி.

தமிழையும், மொழி சார்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை நேசிக்கிற ஒரு #பண்பாளர்.

சமுக நீதி போராளியாக தன்னைத்தானே விசுவருபம் எடுத்த #பிதாமகன்.

ஆண்ட, ஆள்கிற திராவிட கட்சிகளை புள்ளி விவரங்களோடு விமரிசனம் செய்து குலை நடுங்க செய்கிற #சிம்ம_சொப்பனம்.

இத்தனை சிறப்புகள் இருந்தாலும், பாட்டாளிகளான நாங்கள் மருத்துவர் அய்யா அவர்களை குனிந்து வணங்கியதில்லை.

நேர் கொண்ட பார்வையுடன், அய்யா அவர்களின் கண்களை கண்டு. நிமிர்ந்த நெஞ்சோடு வணங்கியுள்ளோமே தவிர இது வரையிலும் வணக்கம் செலுத்துவதற்காக யாரும் அவருடைய கால் நகங்களை கூட தொட்டது கிடையாது.

ஓட்டப்பந்தய வீரனைப்போல் ஓடி விழுந்து வணங்கும் கட்சி தொண்டர்களை காட்டிலும், பாமக தொண்டன் தன்மானமுள்ளவன்.

#தோல்வி_என்பது_நிரந்தரமில்லை.

#வெற்றி_என்பது_அரிதானதுமில்லை.

#முயற்சி_தன்_மெய்வருத்தக்_கூலிதரும்.

பாட்டாளி மக்கள் கட்சி

  #அகிலமே வியக்கும் மருத்துவர் அய்யாவை கொண்ட கட்சி.

ஆ.    #ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலேயே ஆட்சியாளர்களை அதிரவைக்கும் கட்சி.

இ.    #இந்தியா முழுவதும் 108 வர காரணமாயிருந்த கட்சி.

ஈ.      #ஈழ தமிழர் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சி..

உ.     #உலகம் வியக்கும் விருதுகளை வாங்கிய அண்ணன் அன்புமணியை கொண்ட கட்சி..

ஊ.   #ஊழல்வாதிகளை ஒழிக்க வந்த கட்சி..

எ.      #எந்நாளும் மரக்க முடியாத 21 உயிர் தியாகம் செய்த கட்சி..

ஏ.      #ஏழை விவசாயிகளுக்காகக்காக முதலில் குரல்கொடுக்கும் கட்சி..

ஐ.     #ஐ.நா சபையில் தமிழனின் குரலை ஒலிக்கவைத்த கட்சி..

ஒ.        #ஒருநாளும் ஓய்வரியா தீவிர இளம் தொண்டர்களை கொண்ட கட்சி.

ஓ.       #ஓங்கிய கொள்கைகளை உடைய தமிழகத்தின் ஒரே கட்சி..

ஔ.    #ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அரச குடும்பத்தினருக்கான கட்சி.

எங்கள்,

#பாட்டாளி_மக்கள்_கட்சி..

நானும் அந்த கட்சியின் தொண்டன் என்பதில் பெறுமை கொள்கிறேன்..!

புதன், 28 டிசம்பர், 2016

காவலர் பனியிடங்களை நிரப்புக.! --மருத்துவர் அன்புமணி இராமதாசு.!

இனிய இரவு வணக்கம்...சொந்தமே
காவலர்கள் பணி நேரத்தை வரையறுக்க
வேண்டும் : காலியிடங்களை நிரப்புக!
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை முகாமில் காவலராக பணியாற்றி வந்த கோபிநாத் என்ற இளைஞர் ஞாயிற்றுக் கிழமை காலை பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர் கோபிநாத்தின் தற்கொலை மிகவும் கொடுமையானது. மதுரையைச் சேர்ந்த 24 வயதாகும் கோபிநாத் கடந்த 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தொடக்கத்தில் தூத்துக்குடியில் பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் பழனியில் உள்ள சிறப்புக் காவல்படை முகாமில் பணியமர்த்தப்பட்டார். சொந்த ஊருக்கு அருகில் பணியாற்றி வந்த கோபிநாத் கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், 3 மாதங்களாக அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நண்பர்களின் அறையில் தங்கி அவர்கள் உதவியுடன் உணவுத் தேவைகளை சமாளித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களில் பலமுறை உயரதிகாரிகளை சந்தித்து தமக்கு ஊதியம் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களோ பல்வேறு காரணங்களைக் கூறி கோபிநாத்துக்கு ஊதியம் தராமல் தட்டிக் கழித்துள்ளனர். இதனால் கோபிநாத் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக அவருடன் பணியாற்றிய பிற காவலர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி நான்கு நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த 19&ஆம் தேதி ஆயுதப்படை முகாமுக்குத் திரும்பிய கோபிநாத் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டுள்ளார். ஆனால், அதைப்பொருட்படுத்தாமல் அவரை காவல் பணியில் ஈடுபடுத்தியதால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்று அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதை கோபிநாத் எழுதி வைத்துள்ள தற்கொலைக் கடிதத்திலும் உறுதி செய்திருக்கிறார். கோபிநாத்தின் தற்கொலையை தனித்த நிகழ்வாக பார்க்கக் கூடாது. காவல்துறையில், அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல் படை மற்றும் ஆயுதக் காவல் படை பிரிவில் பணியாற்றும் காவலர்களில் பெரும்பான்மையினரின் நிலை இது தான். அவர்கள் அரசாலும், காவல்துறையாலும் எந்திரங்களாகத் தான் பார்க்கப்படுகிறார்களே தவிர மனிதர்களாக பார்க்கப்படுவது இல்லை என்பது தான் பெரும் கொடுமை.
கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதத்தை எடுத்துக் கொண்டால், நவம்பர் 10 ஆம் தேதி முதல் வங்கிகளிலும், தானியங்கி பணம் வழங்கும் மையங்களிலும் (ஏ.டி.எம்) காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு ஓய்வில்லாமல் காவல் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து வர்தா புயல் மீட்புப் பணி, கிறித்துமஸ் என காவலர்களின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்து புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாள், குடியரசு நாள் என இன்னும் ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு ஓய்வு கிடைக்கப் போவதில்லை. இயந்திரத்திற்கு கூட ஓய்வு தேவைப்படும் நிலையில், காவலர்கள் ஓய்வில்லாமல் உழைப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக அவர்களுக்கு உளவியல் கலந்தாய்வோ, பொழுதுபோக்கு ஏற்பாடுகளோ தமிழக அரசாலும், காவல்துறையாலும் செய்யப்படாதது நல்வாய்ப்புக் கேடானது ஆகும்.
காவலர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப் பட்டு வரும் நிலையில் அதை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. அனைவருக்கும் 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும் நிலையில் காவலர்கள் மட்டும் சில நேரங்களில் 24 மணி நேரமும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தமிழக காவல்துறையில் மொத்தமுள்ள 1,21,168 பணியிடங்களில், 97,512 பேர் மட்டுமே இந்த ஆண்டு தொடக்கத்தில் பணியில் இருந்தனர். 23,656 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதன்பின் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட காலியிடங்களையும் கணக்கில் கொண்டால், காலியிடங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். மொத்தப் பணியிடங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான இடங்களை காலியாக வைத்திருந்தால்,காவலர்களின் பணிச்சுமையும், அதனால் மன உளைச்சலும் ஏற்படுவதை எவரும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை அடுத்த சில மாதங்களில் முழுமையாக நிரப்ப வேண்டும்.
அதுமட்டுமின்றி காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, அரசு ஊழியர்கள் & காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல், ஏழு ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு, காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதை உறுதி செய்தல், அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், படி உயர்வு, சலுகை விலையில் பொருட்களை வழங்கும் கேண்டீன்களை அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவு படுத்துதல் உள்ளிட்ட காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருத்துவர். அன்புமணி இராமதாஸ்
#DrAnbumani #Anbumani #AnbumaniRamadoss #Ramadoss #Leadthechange #Changeandprogress #PMK #AnbumaniStatement #TNPolice

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு: மருத்துவர் அன்புமணி பங்கேற்றது ஏன்?

பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பங்கேற்றதை வைத்து, முஸ்லிம்களுக்கு பாமக ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்று சிலர் கொந்தளித்தார்கள்.

ஆனால், முஸ்லிம்களுக்காக மட்டும் பாமக அந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாறாக, பாமகவின் கொள்கையே 'பொது சிவில் சட்ட எதிர்ப்புதான்' என்கிற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றார்.

பாஜகவுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்த 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே - பொதுசிவில் சட்ட எதிர்ப்புதான் பாமகவின் நிலைப்பாடு என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. (படத்தில் காண்க). இதனை 9.11.2016 அன்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை 9.11.2016

இஸ்லாமிய சகோதரர்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும் கூட பொது சிவில் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது; எதிர்க்கிறது; எதிர்க்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளையும், அதன் அரசியல் பயணத்தையும் அறிந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாக புரியும். 

இந்தியாவில், பொருளாளர் பதவியை இஸ்லாமிய சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்த முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். பா.ம.க.வின் இந்த கொள்கையைத் தான் இன்று மேலும் பல கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. இஸ்லாமியர்களின் நலனுக்காக சமூக சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தியது, இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம் அதை எதிர்த்து போராடியது, கோவை கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்பட்ட போது அதற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை

பொது சிவில் சட்டத்திற்காக பாஜக அணிந்திருக்கும் புதிய முகமூடி ‘‘தலாக் நடைமுறையால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்பதாகும். தலாக் நடைமுறையால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதற்கான தீர்வு தலாக் நடைமுறையில் உள்ள குறைகளை களைவது தானே தவிர பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்ல. இது காலில் உள்ள புண்ணை குணப்படுத்துவதற்கு பதிலாக காலையே வெட்டி வீசுவதற்கு சமமாகும். 

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

- இவ்வாறு 9.11.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பாமகவின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு நிலைப்பாட்டை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்  தெளிவு படுத்தியுள்ளார்கள்.
நன்றி.!
-அருள் இரத்திணம்
தமிழ் சமூக ஊடக பேரவை.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

#கடலூர்_தெற்கு_மாவட்டத்தில்_நலிவடைந்து_வரும்_பாமக


பாட்டாளி மக்கள் கட்சி யின்
பெரும் கோட்டையாக திகழ்ந்தது கடலூர் மாவட்டம்..! கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
இருந்த களப்பனி சட்டமன்ற தேர்தலில் இல்லை..அதே போல் சட்ட மன்ற தேர்தலுக்கு
பிறகு பாமக வினர் இருக்கும் இடமும் தெரியவில்லை.2014 ஆம் ஆண்டு ஒவ்வொரு
ஊரிலும் பாட்டாளிகளின் மூவர்ன கொடி பறக்கும்..ஆனால் தற்பொழுது எந்த ஊர்
கிளையிலும் பாமக கொடிகம்பம் இல்லை.
நெடுஞ்சாலைகளிலும் கொடிகம்பம் இல்லை.
இதற்கு முழுமுதற் காரணம் #குழு_அரசியல்
நீ பெரியவனா.? நான் பெரியவனா.?
என்ற நோக்கத்துடன் இருக்கிறார்களே தவிர
களத்திலும் செயல்பாட்டிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும்
இல்லை.இன்னுமொரு பேராபத்தாக இதுவரை இல்லாத #பாஜக பரங்கிப்பேட்டை
ஒன்றியத்தில் காலூன்ற துவங்கியுள்ளது.
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பாஜக என்ற
ஒரு கட்சியை நேற்று தான் பார்த்தேன். அதை
வளர்க்க முற்படுவதும் முன்னாள் பாட்டாளி இளைஞர்கள் தான் என நினைக்கும் போது தான் மனம் வேதனை அடைகிறது.!
ஒன்றிய பொருப்பாளரை குறை சொல்வதா.?
மாவட்ட பொருப்பாளரை குறை சொல்வதா.?
குறை சொல்லி மட்டும் என்ன பயன்.?
ஒரு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைய
வேண்டுமே தவிர .,தேய்மானம் அடைய கூடாது.! வேன்டா வெறுப்புகளை அகற்றி
கட்சி பனி ஆற்றுங்கள்..இல்லையெனில்
தலைமையிடம் கூறிவிட்டு மரியாதையாக
ஒதுங்கிகொள்ளுங்கள்.! தகுதி இல்லாத
நபருக்கு பொருப்பு எதற்கு.?
என்ற கேள்வியை பெரும்பாலான கிராமத்து
இளைஞர்கள் கேட்கின்றனர்.
பதில் கட்சி தலைமையிடம் எதிர்பார்க்கிறார்கள்.!
இவை அனைத்தும் நேற்று நான்
பார்த்தவை மற்றும் கேட்டவை.!

வியாழன், 22 டிசம்பர், 2016

"தொழிளாலர் வைப்பு நிதி"


வருங்கால வைப்புநிதி பி.எஃப் (EPF) பற்றிய தகவல்கள் ...

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952 (en: The Employees Provident Funds Act - 1952) இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.

வருங்கால வைப்புநிதி சார்ந்த திட்டங்கள் :
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைச் சார்ந்து மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இதை இந்திய அரசு "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்" மூலம் செயல்படுத்தி வருகிறது.      தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம்     தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம்     தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்

வருங்கால வைப்பு நிதித் திட்ட இடைக்கால பலன்கள்

வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் வீடுகள் கட்டவும், வாங்கவும் கடன்களைப் பெற முடியும். ஆனால் இந்தக் கடன் பெறுவதற்கு அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்ப்த்தின் அடிப்படையில் அவரது 24 மாத கால சம்பளம் மற்றும் படித் தொகை அல்லது வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தாத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது)மற்றும் வட்டி ஆகியவை கணக்கிடப்பட்டு இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். வீடு கட்டப்படும் பொழுது 12 மாதச் சம்பளம் முன்பணமாக வழங்கப்படும்.தொழிற்சாலை வேலை நிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்கள் தொழிலாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் தொழிலாளர்கள் பங்குச் சந்தாத் தொகைக்கான வட்டித் தொகையை விட அதிகமில்லாதத் தொகையை உதவித் தொகையாக அளிக்கலாம். அவ்வாறு வழங்கப்பட்ட தொகையை அத்தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்கள் சந்தாத்ந்தொகையில் பாதிக்கு அதிகமில்லாத தொகையினை கடனாக அளிக்கலாம். இக்கடன் தொகையைத் தொழிலாளர் பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.உறுப்பினர் நோய்வாய்ப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தால் இந்நிதியிலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டாத தொகையை உதவித்தொகையாகப் பெறலாம். ஆனால் இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதே வகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும்.எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கச் சீற்றத்தினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது விண்ணப்பத்தின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் உதவித் தொகை வழங்கலாம்.மின்வெட்டின் காரணமாக வேலை பாதிக்கப்படும் பொழுது வருமானத்தை இழந்து குறைந்த சம்பளத்தை பெறும் போது திருப்பித்தர வேண்டாத உதவித் தொகையைப் பெறலாம். இதற்கு மாநில அரசிடமிருந்து மின்வெட்டு குறித்த சான்றிதழும், சம்பளக் குறைவிற்கு மின்வெட்டுதான் காரணம் என்கிற நிர்வாகத்தின் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.உறுப்பினர்களின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கும், பெண் குழந்தைகளின் திருமணத்திற்கும் உதவித் தொகை பெற முடியும். ஏதாவது ஒரு குழந்தையின் மேற்படிப்புக்கு ஒரு முறையும், இரண்டு பெண்களின் திருமணங்களுக்கும் உதவித் தொகை பெற முடியும்.

வைப்பு நிதிக் கணக்கு முடித்தல்

தொழிலாளர்கள் கீழ்காணும் சில சூழ்நிலைகளில் வைப்பு நிதித் திட்டத்தில் தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு தங்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்.
உறுப்பினர் ஓய்வு வயதை அடைந்து விட்ட பின்பு அல்லது ஓய்வு பெறும் பொழுது பெறலாம்.உடல் நிரந்தர தகுதியிழப்பினால் வேலை செய்ய இயலாமல் போகும் நிலையில் பெறலாம்.வேலை நீக்கம் அல்லது ஆட்குறைப்பால் வேலை இழக்கும் நிலையில் பெறலாம்.சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குப் பின்பு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று உறுதி அளித்து கணக்கை முடித்துக் கொள்ளலாம்.ஏன் கால தாமதம் 

இந்தியாவில் நாலரை கோடி Provident Fund எனப்படும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் தனது வைப்பு நிதியைப் பெற விரும்பி விண்ணப்பிக்கும்போது முழு செட்டில்மென்ட்டையும் முடிக்க 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. உண்மையில் ஒரு மாதம்தான் அதிகபட்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும் 6 மாதங்கள் வரை இழுத்து விடுகிறார்கள்.

வைப்பு நிதியைப் பெற வேண்டுமானால், வருங்கால வைப்பு நிதிக் கழகத்திடமிருந்து பார்ம் 19ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைக் கொடுத்தாகி விட்டது. சரி, அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது... அதற்கு இப்போது எளிதான வழி வந்து விட்டது. மீண்டும் மீண்டும் பிஎப் ஆபீஸுக்குப் போய் அலைவதை விட இருந்த இடத்திலேயே அதை அறிந்து கொள்ள இப்போது ஆன்லைன் டிராக்கிங் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதென்ன ஆன்லைன் வசதி?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழகத்தின் இணையதளம் (www.epfindia.com) மூலம் இந்த டிராக்கிங்கை நாம் மேற்கொள்ள முடியும்.
இந்த இணையதளத்திற்குப் போய், அதில் நமக்கு எந்த சேவை தேவையோ அதை கிளிக் செய்தால், அதுதொடர்பான அத்தனை உதவிகளும் அங்கு காத்திருக்கிறது. உதாரணத்திற்கு, உங்களது வைப்பு நிதி விடுவிப்பு நிலவரம் withdrawal claim status என்ன என்பதை அறிய வேண்டுமானால், அதுதொடர்பான இணைப்பைக் கிளிக் செய்து உள்ளே போனால் விவரங்களை அறியலாம்.
அந்த இணைப்புப் பக்கத்தில், நாம் எந்த பிராந்தியத்தின் கீழ் வருகிறோமோ அந்த அலுவலகத்தை சொடுக்க வேண்டும். அதில் நமது இபிஎப் கணக்கு எண்ணைக் கொடுத்தால், உங்களது கணக்கின் நிலவரம் தெரிய வரும்.
அதேபோல உங்களது குறைகள், புகார்களையும் கூட ஆன்லைனிலேயே நாம் பதிவு செய்யலாம். நீண்ட காலமாக விண்ணப்பித்தும் பிஎப் பணம் வரவில்லை என்றால் இந்த குறை தீர்ப்புப் பகுதிக்குப் போய் விண்ணப்பிக்கலாம்.

செல்போனிலும் அலர்ட் பண்ணுவாங்க..
அதேபோல உங்களது இபிஎப் விண்ணப்பத்தில் உங்களது செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தால், செல்போன் மூலமும் அலர்ட்களை அனுப்புகிறது வைப்பு நிதி கழகம். உங்களது விண்ணப்பத்தைப் பெற்றவுடன் அதுதொடர்பான ஒரு எஸ்எம்எஸ் வந்து சேரும்.
நாடு முழுவதும் உள்ள 120 பிஎப் அலுவலகங்களில் தற்போது 118 அலுவலகங்கள் ஆன்லைன் செட்டில்மென்ட் வசதியுடன் கூடியதாக உள்ளன. இதனால் சேவை விரைவாகியுள்ளது, உறுப்பினர்களுக்கும் வேலை சுலபமாகியுள்ளது.

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...