புதன், 24 ஜூன், 2020

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.



சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான். 

இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றம் நொடிக்கு நொடி நடந்துகொண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடப்பது கூட...' அனிச்சை செயல் போல சட்டென்று நமது மூளையை வந்தடைகிறது.

80 - களின் காலக்கட்டங்களில்...' அச்சு ஊடகங்களும், வானொலி செவி வழி செய்திகள் மட்டுமே கோலேய்ச்சியிருந்த காலம். வாழ வழிகேட்டு வடமாவட்டங்களில் அறவழி போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த வன்னியர் சமுதாயத்தினர் மீது அன்றைய மத்திய - மாநிலத்தில் ஆளும் அரசுகள் ஏவிய வன்முறைகள் அறிவீர்களா?? வன்னியர்கள் மீது முந்தைய தலைமுறை காக்கிகள் நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டங்கள் பற்றி தெரியுமா?? இன்றைய இளையத்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


துப்பாக்கி குண்டுகளால் எம்மினத்தவர்கள் பலரை துளைத்து 21 உயிர்களை பறித்தார்கள்.  குண்டடிப்பட்டு பலர் உயிர் பிழைத்தார்கள். பூட்ஸ் காலால் உதைத்தார்கள். தோட்டாக்கள் பாய்ந்து உயிருக்கு போராடிய போராட்டக்காரர்கள் வாயில் சிறுநீர் கழித்து உயிரை எடுத்துக்கொண்டார்கள். வன்னிய இனப்பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தபட்டார்கள். கடுமையான பொருட்சேதங்களை ஏற்படுத்தினார்கள். அப்பாவி வன்னியர்கள் அடைந்த துன்பத்தை அறிவீர்களா?? போதாதக் குறைக்கு துணை இராணுவத்தை கூட கொண்டு வந்து அடக்கி ஒடுக்கினார்கள்.


இனி உயிரிழப்பு கூடாது என எண்ணி ஒன்றிரண்டு மரங்களை தான் வெட்டி சாலையில் போட்டு உயிர்பிழைத்தார்கள் பூர்வகுடி வன்னிய மக்கள்.

ஆனால்..." 'மரத்தை வெட்டிய எங்களை இகழ்ந்து.... மனிதரை சுட்ட அரசாங்கத்தை புகழ்ந்தார்கள் இந்த தமிழக மக்கள்..!" மறக்க முடியுமா?? 

இன்று இரண்டு உயிர்கள் காக்கிகளால் பறிக்கபட்டதற்கு அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மேலும்...' அவர்கள் சாதியை குறிப்பிட்டு ஆதரவு கூட்டுகிறார்கள்.

அன்று எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கேட்க எவரும் இல்லை. எந்த அரசியல் கட்சியும் துணைக்கு வந்து நியாயத்தை பேசவில்லை. 

நாங்கள் அனுபவித்த கொடுமையை மறக்க முடியுமா?

இதுபோன்ற நேரத்தில் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் பக்கம் உள்ள நியாத்தை நாங்கள் இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு நினைவு கூர்ந்தால் தான் உண்டு..

செவ்வாய், 10 டிசம்பர், 2019

உளறல் மன்னன் ஸ்டாலின்!

திமுக வின் தற்போதைய தலைவர், மேனாள் இளைஞரணி செயலாளர், சென்னை மாநகராட்சியின் மேனாள் மேயர், கருணாநிதியின் மகன் என்றெல்லாம் புகழப்படும் ஒரு தத்தி தான் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் மகன்(?) என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில், இந்த தரகு வேலை பார்க்கும் மீடியாக்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டு அவைகளின் உதவியோடு வலம் வருகிறார். பொது ஊடகங்களுக்கு தீனிப்போட்டு தனது வீட்டு நாயாக வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு மத்தியில் இந்த தத்தியின் அவலங்கள் தினந்தினம் தோலுரித்து காட்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

"ஸ்டாலின் உளறல் ஓர் பார்வை" என்று தலைப்பெழுதிப் பார்த்தால், எழுதுபவன் நினைத்தவன் அத்தனைப்பேருமே சாகத்ய அகாடமி விருது வாங்குமளவிற்கு எழுத்தாளனாகிவிடுவான். ஆம், ஸ்டாலின் உலறல் பற்றிய தரவுகள் அவ்வளவு உள்ளது.

தமிழ் சினிமாவில் மக்களிடையே அவர்களின் மனதில் கொடிகட்டி பறந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தற்சமயம் பெரிதாக ஒன்றும் படத்தில் நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார் போலும். அவர் நடப்பில் இல்லாத குறையை போக்கிக்கொண்டிருக்கிறார் நம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான திமுக வின் ஸ்டாலின். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு வரி பிழையில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிடும். ஆனால் இந்த தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவ(?) அரசியல்வாதியான ஸ்டாலினால் துண்டுச்சீட்டை பார்த்தும் கூட ஒரு வரி பிழையில்லாமல் மக்கள் மத்தியில் படித்துக்காட்ட முடியாது. அந்த அளவில் தான் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இருக்கிறார்.

அதாவது..."

காமராஜர் அணைகளை கட்டினார்,
கருணாநிதி துணைகளை கட்டினார்!

இதனை ஸ்டாலினின் வழக்கு ஆங்கிலத்தில்,

காமராஜர் 'டேம்'களை கட்டினார்!
கருணாநிதி 'மேடம்'களை கட்டினார்! எனவும் கூறலாம் என எதிரணியினர் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நமக்கு நாமே பயணம் சென்ற பழக்க தோஷத்தில் தனக்கு தானே உலறிக்கொண்டிருக்கிறார் நம் தத்தி ஸ்டாலின்.

சமீப காலமாக நம் உலறல் மன்னன் ஸ்டாலின் அவர்களின் உலறிய உளறல்களை ஒரு பார்வை பார்க்கலாம்...

பேசும் போது வாய் குளறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய் குளறுவததையே பேச்சா வச்சிருப்பவரை இங்கு தான் பார்க்க முடியும்.

குறிப்பாக.. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.."

ஜனவரி 15ம்தேதி சுதந்திர தினம்

டிசம்பர் 25 குடியரசு தினம்...

என தாறுமாறாக உளறினார்.

அடுத்தது தலைவர் அவர்கள் பழமொழி பாவலராக மாறியபோது.."

"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே.." என பழமொழியை பக்குவமாக கூறினார்.

அதுபோக..

மானவி சரிதா.. மானவி அனிதா
---------

வாழைப்பாடி பழனிச்சாமி...

எடப்பாடி பழனிச் சாமி...
-----------

ஆட்டுக்கு தாடி...

மாட்டுக்கு ஆளுநர்...
------------

பூனை மேல் மதில்
----------

தண்ணீர் மீது லாரியை ஏற்றி...
--------

2.7.2005 அன்று சோனியா காந்தி பிரதமரா இருந்த போது..
---------

நான் ஜப்பானின் துணை முதல்வராக இருந்த போது
--------

தேசிய கீதம் நாட்டுபுற பாடல்
--------

கஜா முயல்
--------

சத சதானத்தை வேரறுப்போம்
-------

விஜய மல்லையா,அருண் ஜட்டி
--------

அண்ணாவும் கலைஞரும் சேர்ந்து தான் கலைஞர்!
--------

சித்திரவதைகள் 'சித்திரைகள்' ஆனது..
--------

முதலில் கலவரத்தை நடத்தணும்
---------

சாகித்ய அகாடமி விருதுக்கு பதில்
சாதித்திய விருது
--------

வெற்றிடம் என்பது நிரப்படுவதற்கு முன்பே.. A vacuum is filed as it is cried.
--------

கூட்டல் கணக்கில் - 86 + 9 = 97
----------

வாரிசு இருபர்களுக்கு தான் வாரிசு வருவார்களே தவிர வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு வரமுடியாது.
-----------

அத்தி வரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்... அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது....
-----------

சுபஸ்ரீ ன்ற பெண்ணின் பெயரை  ரூபஸ்ரீ ன்னு சொன்னது..
---------

திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கும்போது பானை ஓலை என உலறியது.."
----------

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு "தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியார் சிலை என உளறியது..
-------

கார்பன் ஹைட்ரோ.. த்தத்..த்த் அந்த கொடுமையான திட்டமாக இருந்தாலும் சரி..
---------

திருமண விழாவில்
மணமகன் பெயரை மாற்றி உளறியது..
--------

Times of india என்கிற...

"ஆங்கில லேடு"
-------------

முந்தாநாள் கூட கடைசியாக

"சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு"

ஒட்டுமொத்த உளறலின் உச்சத்தை தொட்டுவிட்டார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்..


சனி, 18 மே, 2019

வன்னியசாதிப்பிள்ளைகள்


வன்னிய சாதிப்பிள்ளைகள்:
--------------------

இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்

முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி கேட்க மாட்டார்கள், மேலும் இந்த வரி வசூல் அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...

வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது.

சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.

வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.

வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.

படம்: இன்று நமது ஊரில் வரி வசூலில் ஈடுபட்ட வன்னியசாதிப்பிள்ளை. மேலும், இவர்கள் தங்கியிருந்த பழைய புளியமரம் தானே புயலில் விழுந்துவிட்டது. அதனால் நிரந்தரமாக இவர்கள் தங்காமல் அடிக்கடி சென்று வருகின்றனர். உடமைகள் மட்டும் நமது வீட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர்.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

நாடக காதல்

மீண்டும் தலை தூக்கும் நாடக காதல் பிரச்சனை: திட்டமிட்டே வன்னியர் உட்பட பிற்பட்ட சமூக பெண்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் அட்டூஷிய செயல்!

அதிரடியாக களமிறங்கி கேட்பதற்கும் நாதியில்லை. நாடக காதலை ஒழித்த நாயகன் மாவீரன் குரு இல்லாதது அந்த கும்பலுக்கு ஒரு துணிச்சல்.

எனவே நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கட்டாயம் நம் வீட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.

மீண்டும் தலீத் அல்லாதோர் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: பாதிக்கப்ப்படுவது அனைத்து பிற்பட்ட சமுக பெண்களும் தான். குறிப்பாக வன்னியர் சமூகத்தவர்கள்.

கடந்த வாரம் கடலூர் மற்றும் புதுவையை சுற்றயுள்ள ஊர்களில் மீண்டும் இந்த கட்டப்பஞ்சாயத்து நாடக காதல் கும்பல் தலைதூக்க ஆம்பித்துள்ளது. அதில் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பல பெண்களுக்கு வலை வீசியுள்ளனர். சிலர் வலையில் சிக்கியதும் பெரும் சோகம்.

அரசியல் கட்சி என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து இயக்கம் நடத்திவரும் திருமாவளவன் & கோ கும்பலின் சதி தான் இவை அனைத்தும். தற்போது திருமாவளவனை இயக்குவது ஒரு பெரிய திராவிட கட்சி என்பதனை அனைவரும் அறிவோம்.

இதுபற்றி பிறகு பார்ப்போம்.
(தற்போது நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை).

நாடக காதலில்  ஆரம்பித்து, சாதிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது அந்த ஒரு சார்பு கும்பல்.

ஏற்கனவே, பட்டியல்சாதியினருக்கு சாதகமாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிற்பட்ட சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பட்டியல்சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை...

இதற்கு முடிவுரை என்ன? என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வி??

நாடக காதல் என்றால் என்ன??
-----------------

பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.

ஆனால், இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். 

கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம்  சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களும் ஆவர்.

இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் உண்மையான நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே!

இந்தத் திட்டத்தின் பலன்கள் மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.

இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.

இதில் சீரழிந்தவர்கள் ஏராளம்.. எடுத்துக்காட்டிற்காக யாரையும் குறிப்பிட்டு அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை.

நாடக காதலை ஒழிப்பது எப்படி??
----------------------

1. நம் வீட்டு பெண்களிடம் தீவிர 
    விழிப்புணர்வு பிரச்சாரம்.

2. இந்த திட்டத்தை செயல்படுத்தும்
    சதிகார கும்பலை அடக்குவது.

முதலாவது வழிமுறை சுலபமானது; நம் வீட்டு பெண் குழந்தைகளிடம் நம் குலப்பெருமையும், வழக்க நெறிமுறைகளையும் சிறுவயதிலிருந்தே கூறி வளர்ப்பது.

நாடக காதல் செய்யும் அந்த கும்பலின் நோக்கம், திட்டம் , செயல்பாடு போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களிடம் இருந்து விலகியே இருக்கச்செய்வது..

இரண்டாவது வழிமுறை இக்காலத்திற்கு பொருந்துமா என பலரும் கேட்பார்கள்: "அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான்,,  என்பது பழமொழி.

சதிகார கும்பல் நாடககாதல் பயிற்சி க்கு ஒரு பட்டறை செயல்படும்போது, அதனை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நாமும் ஒரு பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்.

பத்துப்பேர் கொண்ட குழு எல்லாவற்றிற்கும் தயாராக எந்நேரமும் இருக்க வேண்டும். (எல்லாவற்றிற்கும்). இந்த பத்துப்பேர் குழுவின் வழக்கு செலவு, வழிச்செலவு போன்றவற்றை பிற்பட்ட சமுக மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றி பொதுவெளியில் வெளிப்படையாக பேச இயலாது.

சதிகார கும்பலின் பிடியில் சிக்காமல் நம் குல பெண்களை பாதுகாப்பது நமது கடமை. குலப்பெருமையை காப்போம்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

"இளைஞர்களின் எழுச்சி!' "எழுச்சியே வளர்ச்சி'' - செல்வ.மகேஷ். மாநில இளைஞர் சங்க செயலாளர், கடலூர் தெற்கு மாவட்டம்.

"இளைஞர்களின் எழுச்சி!'
"எழுச்சியே வளர்ச்சி!"
- செல்வ.மகேஷ்., பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர், கடலூர் (தெற்கு) மாவட்டம்.

மேனாள் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்,  தற்போதைய மாநில இளைஞர் சங்க செயலாளராக பதவி வகிப்பவர் அண்ணன் செல்வ.மகேஷ் அவர்கள்..

மாவட்டம் முழுவதும் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ளவர்.

'பதவிகள் வரலாம், போகலாம்.,,  தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு உண்மையாக, விசுவாசமாக உழைக்க வேண்டும் என்பது தான் அண்ணன் அவர்களின் நோக்கம்; தன்னுடன் வரும் இளைஞர்களுக்கு அவர் போதிக்கும் பாடமும் இதுவே!

அண்ணன் செல்வ மகேஷ் அவர்கள் எப்படி தன்னுடன் இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளத்தை தற்போது வைத்துள்ளார்?? பலருக்கு எழும் சந்தேகம் இது! அதற்கான விளக்கம் இதோ..

" 2012 - ஆம் ஆண்டு நெனைக்கிறேன்.. அப்போது அண்ணன் அவர்கள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார்.. மாவட்டத்தில் ஒவ்வொரு வன்னியர் சங்க பொதுக்கூட்டம், பாட்டாளி பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் வருவார்கள்..

அப்போதே அண்ணன் அவர்கள் இந்த இளம் பள்ளி மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்.. ' நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தை முன்னேற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையே மருத்துவர் அய்யா நமக்கு வழங்கியிருக்கிறார்.. அதனை பின்பற்றுங்கள் செல்லங்களா.. என பாசத்தோடு அரவனைப்பார்..

அப்போது பள்ளி மாணவச்செல்வங்களாக இருந்த குழந்தைகள் இன்று இளைஞர்களாக உருவெடுத்தும் அண்ணன் அவர்களுடன் உறுதுணையாக பயணிக்கின்றனர்.. ,,

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

சீமான் உண்மை முகம்

நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். 

இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும். 

சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
                 ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது.  அதில் நாம்  தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர்  போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார்  சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,
                                        "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான். 
                                      சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சீமானின் துரோகத்துக்கு  இரண்டு ஆதாரங்கள்:

                      1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும்  உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை  பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art
                                          2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0

                                            சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி 
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg

                                                                                
சீமானின் இலங்கை பயண பொய்கள்:

                   சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர்  ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான்
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
                                              ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று  பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது

https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o
                                    இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி  பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு.  அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்

சீமானும் சிங்கர்களும்:
                                     சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த
போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று  பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை

சீமானும் தமிழ்நாடும்:
                                     சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான்  தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை
                                   வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/

                                சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில்  இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.  அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்

மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை  வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும் 

சீமானும் விவசாயமும்:
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்".  இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு
அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)
https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764

சீமானும் ஜல்லிகட்டும்:
          கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள்  வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற  வெறியில் மதுரையில் தனியாக ‌பாேட்டி  போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf 

சீமான் ஒரு தமிழனா?:
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம்
அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.
                                      சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி  கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த
குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும்.  இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது

சீமானின் கொள்கைகள்:
                                          *சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான்.  இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது
                                            சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான். 

சீமானின் ஆதரவாளர்கள்:
                                                சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?

                                          தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு து‌ரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:

                                      1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
                                         2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
                                       3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
                                         4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை  திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன்  வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
                                       நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி  மேடையில் உணர்ச்சி பொங்க பேசி

தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்

நன்றி ; தமிழன்,, blogs..

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...