சனி, 23 டிசம்பர், 2017

வன்னியர் குல தெய்வம் 'பச்சைவாழியம்மன்'


வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'.

எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்மன்.

பால்வாத்துண்ணான் கிராமம்;

கடலூர் மாவட்டம் ,சிதம்பரத்திற்கு வடக்கே சுமார் 16 -கீ.மீ , கடலூருக்கு தெற்கே சுமார் 25 - கி.மீ தொலைவிலும் வங்க கடலில் இருந்து மேற்கே சுமார் 7 .கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா வின் கடைசி குக்கிராமம். வீராணம் ஏரியின் பாசனம் பெரும் கடைசி ஊர்.

நெல் விளையும் 'நன்செய்' நிலங்களும் ,மானாவரி முந்திரியும் , செயற்கை நீர் பாசன வசதி உடையவர்கள் மல்லாட்டை, மற்றும் சில பனப்பயிர்களும்  பயிரிடுகின்றனர்.மிகவும் செழிப்பான ஊரும் அல்ல..மிகவும் வறட்சியான ஊரும் இல்லை..நடுத்தர வளமுடைய ஊர்.

ஊரில் பெரும்பான்மையாக வன்னியர்களும் , அவர்களுக்கு அடுத்தப்படியாக பறையர் சமுகத்தவரும் வசித்துவருகின்றனர்.
குறைவான எண்ணிக்கையில் (4,5 குடும்பங்கள்) விஸ்வகர்மா எனப்படும் கருமார் சமுகத்தவர் வசித்துவருகிறார்கள்.

இவர்கள் யாவருமே நடுத்தர வர்க்கத்தினர் தான்.

வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம். கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக 'வடலூர் நெய்வேலி அருகே உள்ள 'ஆபத்தாணபுரம்' ஊரில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் பலருக்கு குல தெய்வ கோவிலாகும்.

சரி அதுபோகட்டும். பால்வாத்துண்ணன் கிராமத்து படையாட்சிகளின் பச்சைவாழியம்மன் , மற்றும் வாழ்முனி" பற்றி கான்போம்.

"கோவில் தர்மம்" வன்னியர்களின் வழிவழியான வழக்கம்.

பச்சையம்மன் எனப்படும் பச்சைவாழியம்மன் வன்னியர்களின் குலதெய்வம். வளத்தின் செழிப்பின் அடையாளம் பச்சையம்மன். பச்சையம்மனின் காவல் தெய்வம் "வாழ்முனி.

கிராமத்தின் எல்லையில் பல்வேறு மூலிகை தாவரங்கள் சூழ சுமார் 16-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் கோபுரத்திற்குள் குடிகொண்டிருப்பவர் அன்னை பச்சைவாழியம்மன். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிகளுள் ஒருவராக ,பச்சையம்மனின் காவலாக பார்ப்பதற்கு மிக கம்பீரமாக வீற்றிருப்பவர் "வாழ்முனி' தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

பச்சைவாழியம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.. வலதுபுறம் வினாயகரும் ,இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலில் பெரிய அள்வில் ஒரு சிவ லிங்கம் உள்ளது. கோவிலில் லிங்கம் இடம் பெற்றதற்கான காரணம் பச்சையம்மன் புராண வரலாற்றினை படித்தால் விளங்கும்.(சற்று பெரிது)

கோவில் சுமார் அரை ஆயிரம் காலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே கோவில் காட்டில் சற்று ஒரு நூறு மீட்டர் தொலைவில் சபதரிஷிகளான 'முனிஸ்வரர்'கள் காவலாக அமர்ந்திருக்கின்றனர்.

ஒரு சில ஊர் பிரச்சனைகளால் பரமரிப்பின்றி சில வருடங்கள் அப்படியே பாழடைந்த நிலையில் இருந்தது.இவை அனைத்தும் சென்ற வருடம் தான் புதுப்பிக்கப்பட்டது. கோவில் மற்றும் காடு உட்பட அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. கோவில் அறங்கவலாராக ஊரின் வன்னியர் சமுகத்தை சார்ந்தவரே இருக்கிறார்.

கோவில் பூசாரியாக காலங்காலமாக விஸ்வகர்மா சமுகத்தை சார்ந்தவரே , பூஜை செய்துவருகின்றனர்.

திருவிழா என்று பார்த்தால் எனக்கு விவரம் தெரியவருவதற்கு முன்பு பிரம்மாண்டமாக ஏழு சாமிகள் அதாவது பச்சையம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் அன்னவாகனத்திலும், வினாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், 
முருகப்பெருமான் மயில்வாகனத்திலும்,
வாழ்முனி குதிரை மீதும் ஊர்வலம் வந்து சிறப்பாக திருவிழா நடைபெரும் என பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து ஊரில் பங்குனி உத்திரம் , ஆடி மாதம் சாமி ஊர்வலம் , மாசி மகம் போன்றவை.
இதில் பங்குனி உத்திரமே சற்று விமர்சியாக நடைபெறுகிறது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே.! கூடியவரை குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

முன்னோர் முதுமொழி..முடிந்தவரை பின்பற்றுவோம்.

  -- தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...