தமிழத்தேசியத்திற்காக புலவர் கலியபெருமாள் (வன்னியர்) போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வன்னிய இளைஞர்களை காவல்துறை உயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுப்பதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
தமிழரசன் ஆயுதம் தாங்கி போராடினார் என்ற காரணத்திற்காக இன்னமும் எங்கள் இளைஞர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்என்பது உங்களுக்குத் தெரியுமா?
அரியலூரைச் சுற்றியுள்ள வன்னியர் நிலங்களை வளைத்து சிமெண்டு தயாரிக்கும் கம்பெனிகள் வன்னியர்களை அங்கே வேலைக்கே சேர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த சாதியில் பிறந்து விட்டான் என்ற ஒரே காரணத்திற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் நக்சலைட்டு என்று பெயரிடப்பட்டு காக்கா குருவி போல சுட்டுத்தள்ளப்பட்டவர்கள் அப்பாவிகள் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வீரப்பன் சொந்தக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பார்த்தே அறியாதவர்கள் தூக்கு மேடை வரை சென்றார்களே அது உங்களுக்குத் தெரியுமா?
வீரப்பன் வேட்டையிலே கொத்துக்கறி போடப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(வெங்காய) பெரியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, தன் பெயரையே சாதி மறுப்பு என்று சூட்டிக்கொண்டு தனது பட்டப் பெயர்களைத் துறந்து இன்று அசிங்கப்பட்டு நிற்பவர்கள் இந்த வன்னியன் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, இன விடுதலை என்று நம்பிப் போய் சொந்த சாதியை நட்டாற்றிலே தவிக்க விட்டவன் இந்த வன்னியன் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அறிவு ஜீவிகள் எல்லாம் அவனவன் சாதி விடுதலைக்காகப் போராடும் போது, வன்னிய அறிவுஜீவிகள் எல்லாம் சாதி ஒழிப்பிற்கு போராடுகிறான் !
யாருக்கு நட்டம்?
பெற்ற தாயை பிச்சை எடுக்க வைத்து விட்டு, காசிக்கு போய் கோதானம் கொடுத்தானாம் ஒருவன், அந்த கதைதான் இன்றைய வன்னியர் நிலைமை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக