சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.
இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றம் நொடிக்கு நொடி நடந்துகொண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடப்பது கூட...' அனிச்சை செயல் போல சட்டென்று நமது மூளையை வந்தடைகிறது.
80 - களின் காலக்கட்டங்களில்...' அச்சு ஊடகங்களும், வானொலி செவி வழி செய்திகள் மட்டுமே கோலேய்ச்சியிருந்த காலம். வாழ வழிகேட்டு வடமாவட்டங்களில் அறவழி போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த வன்னியர் சமுதாயத்தினர் மீது அன்றைய மத்திய - மாநிலத்தில் ஆளும் அரசுகள் ஏவிய வன்முறைகள் அறிவீர்களா?? வன்னியர்கள் மீது முந்தைய தலைமுறை காக்கிகள் நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டங்கள் பற்றி தெரியுமா?? இன்றைய இளையத்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
துப்பாக்கி குண்டுகளால் எம்மினத்தவர்கள் பலரை துளைத்து 21 உயிர்களை பறித்தார்கள். குண்டடிப்பட்டு பலர் உயிர் பிழைத்தார்கள். பூட்ஸ் காலால் உதைத்தார்கள். தோட்டாக்கள் பாய்ந்து உயிருக்கு போராடிய போராட்டக்காரர்கள் வாயில் சிறுநீர் கழித்து உயிரை எடுத்துக்கொண்டார்கள். வன்னிய இனப்பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தபட்டார்கள். கடுமையான பொருட்சேதங்களை ஏற்படுத்தினார்கள். அப்பாவி வன்னியர்கள் அடைந்த துன்பத்தை அறிவீர்களா?? போதாதக் குறைக்கு துணை இராணுவத்தை கூட கொண்டு வந்து அடக்கி ஒடுக்கினார்கள்.
இனி உயிரிழப்பு கூடாது என எண்ணி ஒன்றிரண்டு மரங்களை தான் வெட்டி சாலையில் போட்டு உயிர்பிழைத்தார்கள் பூர்வகுடி வன்னிய மக்கள்.
ஆனால்..." 'மரத்தை வெட்டிய எங்களை இகழ்ந்து.... மனிதரை சுட்ட அரசாங்கத்தை புகழ்ந்தார்கள் இந்த தமிழக மக்கள்..!" மறக்க முடியுமா??
இன்று இரண்டு உயிர்கள் காக்கிகளால் பறிக்கபட்டதற்கு அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மேலும்...' அவர்கள் சாதியை குறிப்பிட்டு ஆதரவு கூட்டுகிறார்கள்.
அன்று எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கேட்க எவரும் இல்லை. எந்த அரசியல் கட்சியும் துணைக்கு வந்து நியாயத்தை பேசவில்லை.
நாங்கள் அனுபவித்த கொடுமையை மறக்க முடியுமா?