"இளைஞர்களின் எழுச்சி!'
"எழுச்சியே வளர்ச்சி!"
- செல்வ.மகேஷ்., பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர், கடலூர் (தெற்கு) மாவட்டம்.
மேனாள் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர், தற்போதைய மாநில இளைஞர் சங்க செயலாளராக பதவி வகிப்பவர் அண்ணன் செல்வ.மகேஷ் அவர்கள்..
மாவட்டம் முழுவதும் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ளவர்.
'பதவிகள் வரலாம், போகலாம்.,, தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு உண்மையாக, விசுவாசமாக உழைக்க வேண்டும் என்பது தான் அண்ணன் அவர்களின் நோக்கம்; தன்னுடன் வரும் இளைஞர்களுக்கு அவர் போதிக்கும் பாடமும் இதுவே!
அண்ணன் செல்வ மகேஷ் அவர்கள் எப்படி தன்னுடன் இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளத்தை தற்போது வைத்துள்ளார்?? பலருக்கு எழும் சந்தேகம் இது! அதற்கான விளக்கம் இதோ..
" 2012 - ஆம் ஆண்டு நெனைக்கிறேன்.. அப்போது அண்ணன் அவர்கள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார்.. மாவட்டத்தில் ஒவ்வொரு வன்னியர் சங்க பொதுக்கூட்டம், பாட்டாளி பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் வருவார்கள்..
அப்போதே அண்ணன் அவர்கள் இந்த இளம் பள்ளி மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்.. ' நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தை முன்னேற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையே மருத்துவர் அய்யா நமக்கு வழங்கியிருக்கிறார்.. அதனை பின்பற்றுங்கள் செல்லங்களா.. என பாசத்தோடு அரவனைப்பார்..
அப்போது பள்ளி மாணவச்செல்வங்களாக இருந்த குழந்தைகள் இன்று இளைஞர்களாக உருவெடுத்தும் அண்ணன் அவர்களுடன் உறுதுணையாக பயணிக்கின்றனர்.. ,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக