புதன், 4 ஜனவரி, 2017

தமிழனை எதிர்க்கும் மாதர் சங்கம்.

மாங்கெட்மார் ங்ம்:-

சிம்பு பிறந்த நேரமோ என்னமோ தெரியலைங்க சிம்பு என்றாலே வம்பு என்பதாகிவிட்டது. அந்த அளவுக்கு பாவம் இந்த மனுஷன் ஏதாவது ஒரு வம்பில் மாட்டிக் கொள்கிறார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு அடங்கியது. பீப் பாடலால் சிம்புவின் இமேஜ் கண்டபடி டேமேஜ் ஆனது. சிம்பு மீண்டும் தேடிச் வம்பே வந்திருக்கிறது. அதாங்க இப்போ த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் AAA என்ற படத்தில் நடித்துவரும் சிம்பு ட்ரெண்ட் சாங் ஒன்னு ரிலீஸ் பண்ணது அவருக்கு வினையா மாறிடுச்சு. இன்று செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பாடுவதை நடிகர் சிம்பு நிறுத்த வேண்டும், இனி அவர் திருந்த வேண்டும் என கூறியுள்ளார்.  மாதர் சங்கம் சிம்பு பீப்சாங், இப்போ அதே சிம்புவிற்கு எதிராக ட்ரெண்ட் சாங்க்கு கொடி பிடிக்கும் இதே மாதர்சங்கம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற ஒரு இளம் ஒரு கொடூர மிருக்கத்தால், அரிவாளால் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் செத்து மடிந்த அவளுக்காக ஏன் கொடி பிடிக்கவில்லை? விழுப்புரத்தில் நவீனா என்ற சிறுமியை காம கொடூர மிருகம் என்னை ஊற்றி கொளுத்திய போது எங்கே சென்றது இந்த மாதர் சங்கம்? கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி என்ற கல்லூரி மாணவியை உதயகுமார் என்ற கொடூர மிருகம் அடித்தே கொன்றபோது எங்கிருந்தார்கள் இந்த மாதர் சங்கம்? கடந்த சில வருடங்களாக காதலிக்க மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீச்சு நடந்தேறியது. இப்போது அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும் கட்டையால் அடித்தும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொலைவெறியை தீர்க்கும் கொடுமையான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேறிய வேலையில் டப்பு வாங்கிக்கிட்டு பீப்புக்கு போராடும் இந்த மாதர் சங்கத்திற்கு ஏன் இந்த வேலை? சிம்புவிடம் வம்பிழுக்க சொல்வது யாராக இருக்கும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...