செவ்வாய், 10 ஜனவரி, 2017

தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி.!மருத்துவர் அய்யா காட்டம்


தமிழகத்தில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி என்று
ருத்துர் அய்யா கூறியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.!

கும்பகோணம்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது என்று காட்டமாக பேசினார்.

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீரும் கிடைக்காமல், பருவ மழையால் கிடைக்கும் நீரும் கிடைக்காமல் வறட்சியின் பிடியில் தமிழகம் வாடி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாமக சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

எலிக்கறி தின்னும் நிலைக்குத்தான் விவசாயிகளை தமிழக அரசு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பது வெட்கம் கெட்ட ஆட்சி. இங்கு மக்களும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை, அமைச்சர்களும் சரியில்லை, விவசாய சங்கங்களும் சரியில்லை. விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை, இனி கிடைக்கப் போவதும் கிடையாது.

மக்கள் பட்டினி கிடந்து சாகிறார்கள். கிட்டத்தட்ட 190 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். காய்ந்த வயலைப் பார்த்து எந்த விவசாயி உயிரோடு இருக்க முடியும். கண்டிப்பாக அவருக்கு மாரடைப்பு வரத்தாய் செய்யும்.

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட வேண்டும். தஞ்சையில் விவசாயிகள் போராடி இருந்தால் ஒரு அமைச்சர் கூட உள்ளே நுழைந்திருக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...