செவ்வாய், 10 டிசம்பர், 2019

உளறல் மன்னன் ஸ்டாலின்!

திமுக வின் தற்போதைய தலைவர், மேனாள் இளைஞரணி செயலாளர், சென்னை மாநகராட்சியின் மேனாள் மேயர், கருணாநிதியின் மகன் என்றெல்லாம் புகழப்படும் ஒரு தத்தி தான் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் மகன்(?) என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில், இந்த தரகு வேலை பார்க்கும் மீடியாக்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டு அவைகளின் உதவியோடு வலம் வருகிறார். பொது ஊடகங்களுக்கு தீனிப்போட்டு தனது வீட்டு நாயாக வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு மத்தியில் இந்த தத்தியின் அவலங்கள் தினந்தினம் தோலுரித்து காட்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

"ஸ்டாலின் உளறல் ஓர் பார்வை" என்று தலைப்பெழுதிப் பார்த்தால், எழுதுபவன் நினைத்தவன் அத்தனைப்பேருமே சாகத்ய அகாடமி விருது வாங்குமளவிற்கு எழுத்தாளனாகிவிடுவான். ஆம், ஸ்டாலின் உலறல் பற்றிய தரவுகள் அவ்வளவு உள்ளது.

தமிழ் சினிமாவில் மக்களிடையே அவர்களின் மனதில் கொடிகட்டி பறந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தற்சமயம் பெரிதாக ஒன்றும் படத்தில் நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார் போலும். அவர் நடப்பில் இல்லாத குறையை போக்கிக்கொண்டிருக்கிறார் நம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான திமுக வின் ஸ்டாலின். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு வரி பிழையில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிடும். ஆனால் இந்த தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவ(?) அரசியல்வாதியான ஸ்டாலினால் துண்டுச்சீட்டை பார்த்தும் கூட ஒரு வரி பிழையில்லாமல் மக்கள் மத்தியில் படித்துக்காட்ட முடியாது. அந்த அளவில் தான் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இருக்கிறார்.

அதாவது..."

காமராஜர் அணைகளை கட்டினார்,
கருணாநிதி துணைகளை கட்டினார்!

இதனை ஸ்டாலினின் வழக்கு ஆங்கிலத்தில்,

காமராஜர் 'டேம்'களை கட்டினார்!
கருணாநிதி 'மேடம்'களை கட்டினார்! எனவும் கூறலாம் என எதிரணியினர் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நமக்கு நாமே பயணம் சென்ற பழக்க தோஷத்தில் தனக்கு தானே உலறிக்கொண்டிருக்கிறார் நம் தத்தி ஸ்டாலின்.

சமீப காலமாக நம் உலறல் மன்னன் ஸ்டாலின் அவர்களின் உலறிய உளறல்களை ஒரு பார்வை பார்க்கலாம்...

பேசும் போது வாய் குளறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய் குளறுவததையே பேச்சா வச்சிருப்பவரை இங்கு தான் பார்க்க முடியும்.

குறிப்பாக.. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.."

ஜனவரி 15ம்தேதி சுதந்திர தினம்

டிசம்பர் 25 குடியரசு தினம்...

என தாறுமாறாக உளறினார்.

அடுத்தது தலைவர் அவர்கள் பழமொழி பாவலராக மாறியபோது.."

"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே.." என பழமொழியை பக்குவமாக கூறினார்.

அதுபோக..

மானவி சரிதா.. மானவி அனிதா
---------

வாழைப்பாடி பழனிச்சாமி...

எடப்பாடி பழனிச் சாமி...
-----------

ஆட்டுக்கு தாடி...

மாட்டுக்கு ஆளுநர்...
------------

பூனை மேல் மதில்
----------

தண்ணீர் மீது லாரியை ஏற்றி...
--------

2.7.2005 அன்று சோனியா காந்தி பிரதமரா இருந்த போது..
---------

நான் ஜப்பானின் துணை முதல்வராக இருந்த போது
--------

தேசிய கீதம் நாட்டுபுற பாடல்
--------

கஜா முயல்
--------

சத சதானத்தை வேரறுப்போம்
-------

விஜய மல்லையா,அருண் ஜட்டி
--------

அண்ணாவும் கலைஞரும் சேர்ந்து தான் கலைஞர்!
--------

சித்திரவதைகள் 'சித்திரைகள்' ஆனது..
--------

முதலில் கலவரத்தை நடத்தணும்
---------

சாகித்ய அகாடமி விருதுக்கு பதில்
சாதித்திய விருது
--------

வெற்றிடம் என்பது நிரப்படுவதற்கு முன்பே.. A vacuum is filed as it is cried.
--------

கூட்டல் கணக்கில் - 86 + 9 = 97
----------

வாரிசு இருபர்களுக்கு தான் வாரிசு வருவார்களே தவிர வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு வரமுடியாது.
-----------

அத்தி வரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்... அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது....
-----------

சுபஸ்ரீ ன்ற பெண்ணின் பெயரை  ரூபஸ்ரீ ன்னு சொன்னது..
---------

திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கும்போது பானை ஓலை என உலறியது.."
----------

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு "தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியார் சிலை என உளறியது..
-------

கார்பன் ஹைட்ரோ.. த்தத்..த்த் அந்த கொடுமையான திட்டமாக இருந்தாலும் சரி..
---------

திருமண விழாவில்
மணமகன் பெயரை மாற்றி உளறியது..
--------

Times of india என்கிற...

"ஆங்கில லேடு"
-------------

முந்தாநாள் கூட கடைசியாக

"சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு"

ஒட்டுமொத்த உளறலின் உச்சத்தை தொட்டுவிட்டார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்..


சனி, 18 மே, 2019

வன்னியசாதிப்பிள்ளைகள்


வன்னிய சாதிப்பிள்ளைகள்:
--------------------

இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்

முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி கேட்க மாட்டார்கள், மேலும் இந்த வரி வசூல் அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...

வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது.

சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.

வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.

வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.

படம்: இன்று நமது ஊரில் வரி வசூலில் ஈடுபட்ட வன்னியசாதிப்பிள்ளை. மேலும், இவர்கள் தங்கியிருந்த பழைய புளியமரம் தானே புயலில் விழுந்துவிட்டது. அதனால் நிரந்தரமாக இவர்கள் தங்காமல் அடிக்கடி சென்று வருகின்றனர். உடமைகள் மட்டும் நமது வீட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர்.

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...